திங்கள், 15 பிப்ரவரி, 2016

வேண்டும் வரம் தரும் கோட்டைமாரியம்மன்

கோட்டை மாரியம்மன் திருவிழா 

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா ஆரம்பம்                                  
                                               எங்கள் மண்ணுக்கே பெருமை சேர்க்கும் கோவில்களில் முதன்மையானது அபிராமி அம்மன் கோவிலும் கோட்டை மாரியம்மன் கோவிலுமாகும் .மற்றும் பல கோவில்கள் திண்டுக்கல் மாநகரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக இருந்தாலும் மாரியம்மன் கோவில் திருவிழா சுற்றி உள்ள அனைத்து கிராம மற்றும் நகர மக்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழாவாகும் . இந்த மாசி மாதத்தில்தான் பக்தர்கள் பெரும்பாலும் அம்மனுக்கு தாங்கள் நேர்ந்து கொண்ட நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


                                                      ஸ்ரீ கோட்டை மாரியம்மன் 

                                              தேரில் பவனி வரும் மாரியம்மன்


                                             மாரியம்மன் கோவில் முன் வாசல் 

                                                            கோவில் யானை 

                                    சீரியல் வெளிச்சத்தில் மின்னும் கிருஷ்ணர் 

                                                         அலங்கார   விநாயகர் 

                                                பகல் வெளிச்சத்தில் கோவில் 

                                        இரவில் தீச்சட்டி  எடுத்தபடி ஆடுவோர் 

                                     கோவிலைச்  சுற்றி தண்ணீர் ஊற்றுவோர் 

                                         தீச்ச்சட்டிக்கு முன் மேளம் வாசிப்போர் 

                                                 பகலில் தீச்சட்டி ஏந்துவோர்

                                               பகலில் தீச்சட்டி ஏந்தும் பக்தர்கள் 

                                 கோவிலுக்கு இடது புறத்தே விநாயகர் சன்னதி 

                                           அலகு குத்தியபடி தீச்சட்டி எடுப்பவர்   

வேண்டுதல்கள் :
            
                                 கோட்டை மாரியம்மனுக்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்கள் பல பல.... காலையில் 6 மணியில் இருந்தே கோவிலை சுற்றி பெண்கள் தண்ணீர் ஊற்றி இறுதியாக கொடிமரத்திற்கு ஊற்றுவர். பலர் இதை 3 நாட்கள் தொடர்ந்து செய்வர்.

வேண்டுதல்கள் பல வகை : 
                                                    பால் குடம் , தீச்சட்டி எடுத்தல் , முளைப்பாரி தூக்குதல் ,தீ மிதிப்போர் , மா விளக்கு போடுவோர், கண் மலர் வாங்கி போடுபவர்கள், கோவிலுக்கு ஆடு , கோழி நேர்ந்து விடுதல் என பலரும் பலவித வேண்டுதல்கள் செய்வர். 

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன