புதன், 11 மே, 2016

ஆட்டுக் கறி விருந்து(ஞாயிற்று கிழமைகளில்)

சின்னக்காளை கறிக்கடை, திண்டுக்கல் 

                  ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலருக்கும் அது விடுமுறை தினமாதலால் எல்லோர் வீட்டிலும் பெரும்பாலும் அசைவமே சமைக்கப்படும். கறிக் கடைகள், கோழிக் கடைகள், மீன் மார்க்கட் என அனைத்து வகை அசைவ கடைகளிலும்  மக்கள் கூட்டம் நிறையும்.


                                             சின்னக் காளை கறிக்கடை 

                                    திண்டுக்கல்லை பொறுத்த வரையில் வேணு பிரியாணி ரோட்டில் உள்ள இந்தக் கடையில் காலை 6 மணிக்கே சென்றாலும் கூட்டமாகவே காணப்படும். இந்தக் கடைக்கு என பெயர் பலகை எதுவும் இருந்தது இல்லை. ஆனால் மக்கள் அழைப்பது சின்னக் காளை கடை என்றுதான். இங்கு காலையில் இருந்தே ஆண்கள், பெண்கள் என கறி வாங்குவதற்கு கூட்டம் நின்று கொண்டே இருக்கும். மதியம 2 மணிக்கு  பிறகே இங்கே கூட்டம் சற்று குறைய ஆரம்பிக்கும் .

                                            கறிக் கடை படம் - 2
                                         
                                           இங்கு  கடையின் உள்ளே பனியனுடன் நிற்பவர்தான் இந்த கடைக்கு முதலாளி, இவர் நிற்கும் பக்கம் ஆண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். கடையின் கல்லா பக்கம்  இவரது மனைவி அமர்ந்திருப்பார். இங்கே பெண்கள் கூட்டமாக நின்று கறி  வாங்க பணத்தை நீட்டிக்  கொண்டேயிருப்பர். கறி எனக்கு அரை கிலோ, எனக்கு 1 கிலோ,100 ஈரல் தனியாக வையுங்கள் என குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் . கறியை வாழை இலையில் வைத்து பார்சல் பண்ணித்  தருகின்றனர்.

                                                      ஆட்டுக் கறி பார்சல் 

                                                இந்தக் கறிக் கடையில் கறி மட்டுமல்லாது கறியோடு சேர்த்து குடல், தலைக் கறி, ஆட்டுக் கால், மூளை, நுரையீரல்,சுவரொட்டி என அனைத்தும் கிடைக்கும். குடலை இவர்களே சுத்தம் பண்ணி அறுத்து கொடுத்து விடுவர். ஆட்டுக் காலும் வாட்டி  துண்டு போடப்பட்டே கொடுக்கப்படுவதால் சுத்தம் பண்ணும் சிரமம் அவ்வளவாக நமக்கு இல்லை. வீட்டிற்கு போய் ஒரு அலசு அலசி சமைத்து விடலாம்.

                                               ஆட்டுக் கறி தண்ணீரில் 

                                   இந்தக் கடையில் இருந்து அதிக தூரத்தில் வெவ்வேறு ஏரியாக்களில் குடியிருப்போர் கூட இங்கு வந்தே  கறி  வாங்குவர் . சில சமயம் வெளியூர்களில் இருந்து வருவோர் கூட இங்கு கறி வாங்கி செல்வர். காரணம் ஆட்டு கறியானது சக்கை சக்கையாக இல்லாமல் கொழுப்புடன் சேர்ந்த கறியாக சமையலில் அதிக ருசியைக்  கொடுக்கும்.  


                                               கறிக் கடைக்கு எதிர் பக்கம் 

                                                    சின்னக்காளை   கறிக்கடை    மாரியம்மன் கோவில் சமீபத்தில் வேணு பிரியாணி ரோட்டில் உள்ளது. இந்த கடைக்கு அருகிலேயே காய்கறி மார்க்ட்டும், சுற்றிலும் நிறைய கறிக் கடைகள், கோழி,  மீன் விற்கும் கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்  கிழமைகளில் இந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கோ, ஏன் நடப்பதற்கே இடம் இல்லாத அளவு கூட்டம் நிரம்பி வழியும் .












தொடரும்............









                                                                                                                



                                              
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

4 கருத்துகள்:

  1. படிக்கும் போதே நா ஊருகிறது... இதே போல் கடை சென்னையில் இருக்கிறதா ? - fewinfo.com

    பதிலளிநீக்கு
  2. நாவில் உங்க ஆட்டுக்கறிச் சமையல் ருசி தெரியுது கடையை விட [[ அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன