சனி, 15 பிப்ரவரி, 2025

அஹனி கறி

காயல்பட்டிணம் ஸ்பெஷல்
 
 இந்த வாரம் நமது பதிவில்  அஹனி கறி செய்து சுவைப்போமா?
வழக்கமாக நாம் செய்து சாப்பிடும் ஆட்டுக்கறி குழம்பில் இருந்து சற்று மாறுபட்ட சுவையில் செய்து ருசித்தோம்.

தேவையான பொருட்கள்

    1. மட்டன் 1/2 கிலோ
    2. தயிர் 100 கிராம்
    3. சுத்தமான நெய் 75 கிராம்
    4. தேங்காய் எண்ணெய் 75 கிராம்
    5. முந்திரி 50 கிராம்
    6. பாதம் 50 கிராம்
    7. பச்சை மிளகாய் 7
    8. வெங்காயம் 3
    9. இஞ்சிப் பூண்டு விழுது 3 டீஸ்பூன்
    10. ஏலக்காய், கருவா, கிராம்பு, தேவையான அளவு
    11. ரம்பை இலை 2
    12. கொத்த மல்லி இலை 1/4 கப்
    13. புதினா இலை 1/4 கப்



  • கறியை கழுவி விட்டு அதில் பாதி தயிர் வெங்காயம் போட்டு புரட்டி வைக்கவும். பாதம் தோலை நீக்கி விட்டு, முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் 3 இவற்றை அரைத்து வைக்கவும்.
  • பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஏலம், கருவா, கிராம்பு, ரம்பை இலை, தயிர் ஊற்றவும்.
  • அவை பொன்னிறமாக வந்தவுடன் கறியைப் போட்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்புப் போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றிக் கலக்கி, கொதித்த பிறகு தீயை குறைத்து 10 நிமிடம் அப்படியே போட்டு விட்டு தீயை அணைத்து விட்டு எடுத்தால் சுவையான அஹனிக் கறி ரெடி.


  • நெய் சாதம், இடியப்பம், ஆப்பத்துடன் இந்த அஹனி கறி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


    ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்கும். இல்லையெனில், பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ளலாம்.



    இந்த வாரம்  நீங்களும் அஹனி கறி செய்து ருசித்து  பாருங்களேன்...


    வெள்ளி, 8 நவம்பர், 2024

    உங்கள் நரை முடியை நிரந்தரக் கருமையாக மாற்றும் வேம்பாளம்பட்டை ஹேர் பேக்…

    நம்மில் பலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். 

             நரைமுடியை கருமையாக்க பெரும்பாலானோர் ஹேர் டைகளை பயன்படுத்துவர். ஆனால் இந்த ஹேர் டைகளில் உள்ள வேதிப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மேலும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

    வேம்பாளம் பட்டை வாங்க...

    https://amzn.to/4iuruKv

    அதற்கு மாற்றாக நரை முடி பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தி பார்க்கலாம்.


    வேம்பாளம் பட்டை என்பது ஒரு வகை மரத்தின் பட்டையாகும். இந்த பட்டை ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சினைகள் வரை என எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் ஒரு அற்புதமான மூலிகை பட்டை ஆகும்.

    இதனை ஆங்கிலத்தின் ரத்தன் ஜோட் (Ratan Jot) என்று கூறுவர்.

    இந்த வேம்பாளம்பட்டை எண்ணெய் முடி நீளமாக வளரவும், நரையைத் தடுக்கவும் உதவுகிறது.

    இந்த பட்டையை எண்ணெயில் சேர்த்ததும் எண்ணெய் நன்கு சிவப்பாக மாறத் தொடங்கும்.




    தேவையானவை:

    கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

    காய வைத்த மருதாணி இலை - ஒரு கைப்பிடி அளவு

    வேம்பாளம் பட்டை - சிறிதளவு

    வெந்தயம் - 1 ஸ்பூன்

    சுத்தமான தேங்காய் எண்ணெய் - 100 ml



    செய்முறை:

    • ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் தேங்காய் எண்ணெய் தவிர, மேற் சொன்ன பொருட்களை அந்தந்த அளவுகளில் எடுத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
    • பின் ஒரு இரும்புக் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கடாய் சிறிது சூடானவுடன் அதில் தேங்காய் எண்ணெண்யை ஊற்றி சிறிது சூடாக்கவும்.
    • பின் அதில் நாம் தயார் செய்த பவுடரை சேர்க்கவும்.
    • அடுப்பை சிம்மில் வைத்து அந்தக் கலவை நன்கு கருமையாக மாறும் வரை கிளறவும்.
    • பின் அதை அடுப்பிலிருந்து இறக்கி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும்.
    • மறு நாள் காலை ஒரு பவுலை எடுத்து அதில் வெள்ளைத் துணியை விரித்து அந்தக் கலவையை அதில் விட்டு நன்கு பிழியவும்.
    • பிழிந்த அந்த எண்ணையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவவும்.
    • பின் ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும்.
    • வாரம் இரு முறை இப்படி செய்து வர எவ்வளவு நரை முடி இருந்தாலும் கருமையாக மாறும்.
    • சொட்டையான இடங்களிலும் முடி வளரும்.
    பயனுள்ள இந்தக் குறிப்பை நீங்களும் உபயோகப்படுத்தி பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

    வேம்பாளம்பட்டை அமேசான் ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...




    செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

    வேள்பாரி நாவல்(புதியதொரு உலகத்தினுள் நுழையும் உணர்வு)

    இதுவரை எழுதப்படாத ஒரு வரலாறு. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்ற ஒற்றை வரிக்கு உயிர் கொடுத்த ஓவியம் இந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல்... 


    அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் 10% ஆஃர் விலையில் உங்கள் வேள்பாரி நாவல் வாங்க...
    கிளிக்
    https://amzn.to/41jPhH3




                                       பலவித அரிய தகவல்களை உள்ளடக்கிய இந்த சுவாரஸ்யமான நாவலை கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் படிக்க நேர்ந்தது. நாவலின் சில பக்கங்களை வாசித்து கடக்கும் போதே, அடடா இத்தனை நாளும் இந்த வரலாற்று பொக்கிஷத்தை வாசிக்காமல் விட்டு விட்டோமே என வெகுவாகத் தோன்றியது.


                                நாவலை வாசித்தபடியே பாரியுடனும், கபிலருடனும் நான் பயணித்த போது காடும், மலையும் அதற்கு உயிர் கொடுத்த கதாபாத்திரங்களும், அசுணமா எனும் இசை கேட்டு ஆடும் பறவை, இறகு நாவல் பழம், அறுபதாங் கோழி என அனைத்தும் என் மனத்திரையில் தோன்றி உலா வந்தன.



                                  நாவலின் இறுதி அத்தியாயம் முழுவதும் போரும், அதற்காக வகுக்கப்படும் யுக்திகளும் பாரிக்கு வெற்றியை கொடுத்ததா? எனத் தெரியும் வரை புத்தகத்தை கீழே வைக்கவே தோன்றவில்லை. இறவா வரம் பெற்ற இராவதன் மரணம், திசை வேர், பொற்சுவை மறைவு(இன்னும் எத்தனையோ சுவாரசியங்கள், நாவலை படித்தால் மட்டுமே புரியும்) என படிக்க படிக்க விறுவிறுப்பு கூடிக் கொண்டே போனது.

                                  நாவலை படித்து முடித்தவுடன் நம் மனதிலும் சொல்ல முடியா ஒரு உணர்வு பரவியது. அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ வேலைகளுக்கும், வாழ்க்கைச் சுமைகளுக்கும் இடையே ஓடினாலும் பாரி என்ற பெயர் எங்காவது உச்சரிக்கப்படும்போதே பாரியின் வரலாறு முழுவதும் என் மனக்கண்ணில் படுவேகமாக தோன்றி மறைந்து ஒரு இனிமையான உணர்வு சூழும்.



                            இத்தனை சுவாரஸ்யம் நிறைந்த நாவலை நீங்களும் வாங்கி வாசித்து புதியதொரு உலகத்துக்குள் நுழைய இங்கே கிளிக் செய்யவும்.


    வியாழன், 8 ஆகஸ்ட், 2024

    உங்கள் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் பல வித ஆஃபருடன் கூடிய பொருட்கள் உங்களுக்காக இங்கே..

    உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும்  வண்ணங்களில் 

    L*O*L Kids Surprise Toys

    24% ஆஃபர் விலையில் வாங்கி மகிழ இங்கே கிளிக்கவும்...(Amazon products affiliate link)

    https://amzn.to/4fFgNm3





    கண்ணை உறுத்தாத வகையில் அழகான கலரில்( பல வித வசதிகளுடன் கூடிய Samsung Galaxy M15 5G கைபேசி(Cell) 22% ஆஃபர் விலையில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...





    உங்கள் வீட்டின் பூஜை அறையை அலங்கரிக்க குறைந்த விலையில் தாமரைப்பூவால் டெக்கரேஷன் செய்ய  62% ஆஃபரில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...





    மற்றுமொரு அழகான பயனுள்ள பூஜை அறையை அலங்கரிக்க கூடிய உருளி 50% ஆஃபர் விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்...

    https://amzn.to/3UGOxYm


      

    குறைந்த விலையில் அழகான லட்சுமி சரஸ்வதி விளக்கு 60% ஆஃபர் விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்....

    https://amzn.to/4elz4E9


    சுப.வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் உங்கள் அமேசானில் வாங்க..

    https://amzn.to/4ekiZP0




    வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன.

    https://amzn.to/4ekiZP0
















    புதன், 21 பிப்ரவரி, 2024

    ஆட்டு தலைக்கறி குழம்பு விருந்து

                                      வணக்கம்  உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் தலைக்கறி குழம்பு சுவைப்போமா? ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலரது வீடுகளில் அசைவம்தான் முதலிடம் பிடிக்கும். நமது வீட்டிலும்தான். வழக்கமான ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுவது சலிப்புத்  தட்ட வீட்டினரின்  ஏகோபித்த கருத்தால் இம்முறை தலைக்கறி வாங்கி  சமைத்துச்  சுவைக்கலாம் என கறிக்கடைக்கு கிளம்பினோம்.


                             சண்டே ஸ்பெசலாக அனைவரது வீட்டிலும் அசைவ வாசனை காற்றில் மிதக்கும் என்பதால் 6 மணிக்கே கறிக்கடையில் வழக்கம் போல  கூட்டம்.
                                      எனக்கு ஒரு கிலோ கறி, இங்க ஈரல் மட்டும் கொடுங்க, எனக்கு குடல் சுத்தம் செய்து கொடுங்கள். எனக்கு ஆட்டுக்கால் சீக்கிரம் வாட்டுங்கள் என பல வித சப்தங்களுக்கிடையே தலைக்கறியை சுத்தம் செய்து வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தோம். வீடு வந்து தலைக்கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்தேன். இப்போது சமைக்க ஆரம்பிப்போமா?


    தலைக்கறி செய்யத்  தேவையானவை :

    தலைக்கறி - 1 கிலோ (அ ) தலை ஒன்று 

    வெங்காயம் - 200 கிராம் 

    தேங்காய் - தேவையான அளவு 

    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்  

    பிரியாணி இலை - 1 மற்றும்  கிராம்பு - 5

     மிளகாய் தூள் - 4 ஸ்பூன்  

    இஞ்சி பூண்டு - தேவையான அளவு 

    மல்லித்தூள் - 1 ஸ்பூன் 

    ஜாதிபத்ரி - சிறிது 

    சோம்பு - சிறிது 

    இலவங்கப்பட்டை - சிறிய துண்டு


    தலைக்கறி செய்முறை :

    1. தலைக்கறியை சுத்தமாகக் கழுவி 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.

    2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து  கொத்தமல்லி, இலவங்கப்பட்டை,  கிராம்பு, சோம்பு மற்றும் ஜாதிபத்ரியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    3. பின் இதனை மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.              வெங்காயம், தக்காளி தனியாக வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.            
    பின் குழம்பு வைக்க தேவையான அளவுக்கு தேங்காய் எடுத்து தனியாக    அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    4. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலையை      வதக்கவும். பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
    அதன் பின் அரைத்து வைத்த வெங்காயம், தேங்காய்  சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    5. பின்பு வேக வைத்த தலைக்கறியை அந்தக் கலவையில் சேர்த்து 5 நிமிடம் மூடி  வைக்கவும். பின் மூடியை அகற்றி மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக்  கலக்கவும். பின் மற்றொரு 5 நிமிடத்திற்கு பின் தண்ணீர் சேர்த்து வேக  விடவும்.                


    6. தண்ணீர் சேர்த்த பின் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு தலைக்கறிக்குழம்பு  கெட்டியாகும் வரை சமைக்கவும்.

    7. குழம்பின்  மேலே எண்ணெய் மிதக்கும். பின் அதன் மேல் கொத்தமல்லித் தழை  தூவி அடுப்பை அணைக்கவும்.

    8. இப்போது ருசியான தலைக்கறி குழம்பு தயார்.


                                              வீடு முழுவதும் மிதந்த தலைக்கறிக் குழம்பின் வாசனை  பசியைத் தூண்டியது. அனைவருக்கும் வாழை இலையை விரித்து அதில் வெள்ளை சாதத்தை பரிமாறி அதன் மேல் தலைக்கறி குழம்பை ஊற்றி பிசைந்து ஒரு வாய் சாப்பிட ஆகா வெகு சுவையாக இருந்தது. தலைக்கறி நன்கு வெந்து மெதுவாக இருக்க சாதத்துடன் சேர்த்து வாழை இலை வாசனையுடனும், தலைக்கறி குழம்பின் வாசனையுடனும் சாப்பிட நிமிடத்தில் இலை காலியாகி தலைக்கறி குழம்பு விருந்து நம் வயிறை நிரப்பியது.


                                      தலைக்கறியுடன் ஒரு மூளை வாங்கி பெப்பர் பிரை செய்து சாப்பிட சுவை இன்னமும் தூக்கியடிக்கும். ஒரு வாய் தலைக்கறி, சாதம், குழம்புடன் சுவைத்து, பின் மறு வாய் சாதம், குழம்புடன் மூளை பிரை சேர்த்துச் சாப்பிட வெகு திருப்தியாக ஞாயிறு விருந்து மனதையும், வயிறையும் நிறைத்தது.


                                                                                   தலைக்கறி சாதத்திற்க்கு மட்டுமல்லாமல், இட்லி, ராகி களிக்கும் சேர்த்துச் சாப்பிட சுவை நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை தலைக்கறி சுவையுங்கள் உறவுகளே.


    மற்றொரு ஞாயிறு விருந்தில் சந்திப்போம்...


    சனி, 4 நவம்பர், 2023

    சிக்கன் வித் பரோட்டா

                                     இந்த வாரம் நமது அபியின் பயணங்களில் சிக்கன் வித் பரோட்டாவுடன் சுவை மிகுந்த பயண அனுபவத்தை ரசிப்போமா? வானத்தில் மெல்ல மெல்ல வெளிச்சம் பரவ ஆரம்பித்த ஒரு விடியல் நேரத்தில்  மழைத் தூறலுடன் நமது  பயணத்தை துவக்கினோம். ஆம், சிறுமலை நோக்கித்தான் நமது பயண இலக்கு 


                                                தினமும் நகர வாழ்க்கையில் மூழ்கி காலை எழுந்து வேலைக்குச் சென்று மாலை கூட்டுக்குள் அடையும் பறவை போல பயணித்த நாட்களில் இருந்து வெளியேறி  மனதிற்கு ஒரு இனிதான மாற்றம் வேண்டி விடுமுறை நாளில் சிறுமலைப்  பயணத்தை மேற்க்கொண்டோம். வழியில் காலை உணவுக்காக நிறுத்தி தோசை, சாம்பாரில் மூழ்கி எழுந்து, மதியத்துக்கான சாப்பாடு பார்சலாக பரோட்டாவையும், சிக்கன் கிரேவி, சிக்கன் சால்னா, சிக்கன் 65 வாங்கிக் கொண்டோம். 


                                                      சிறுமலை பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகளுடன் சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ நம்மை வரவேற்றது. மலையில் ஏறியவுடன் தேநீர் அருந்தி விட்டு அகஸ்தியபுரம் நோக்கிச் சென்றோம். லிங்கத்துக்குள் அம்மனுடன் அமைதியான ஒரு இயற்கைச் சூழல். அங்கங்கே நிறுத்தி இயற்கையை ரசித்துக் கொண்டே சென்றோம். 


                                              சிறுமலை ஏறியவுடன்  உள்ள வாட்சிங் டவரில் ஏறி சுற்றிலும் தெரியும் மலையின் காட்சிகளை ரசித்தோம். பின் அங்குள்ள பல்லுயிர் பூங்காவுக்கும் சென்றோம். செயற்கை அருவியுடன், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. அதனை ரசித்து விட்டு வானம் கருக்க ஆரம்பித்ததால் மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம்.


                                                   சிறுமலை கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது பசி வயிற்றைக் கிள்ள, வெகுநேரமாக பார்சலில் உள்ள பரோட்டாவுடனான, சிக்கன் சால்னா, சிக்கன் 65 மணமும் நம்மை சாப்பிட வா வா என அழைக்க மலையிறங்கும் வழியில் ஒரு ஓரமாக அமர்ந்தோம். 


                                               சிறுமலையைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை கண்களால் அள்ளிப் பருகியபடியே, சாப்பிட ஆரம்பித்தோம். உணவின் சுவையும், மலையின் அழகும் புதியதொரு இதமான  உணர்வை நமக்குள் ஏற்படுத்தின.


                                         பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பல வகையான  சால்னா, குருமா, மட்டன் சுக்கா, மீன் வறுவல், முட்டைக் கலக்கி, குடல் வறுவல், குடல் குழம்பு, மூளை பிரட்டல், ஈரல் வறுவல், சுவரொட்டி என எத்தனையோ இருந்தாலும் நமக்கு பிடித்ததென்னவோ சிக்கன் சால்னா, சிக்கன் லெக் பீஸ், சிக்கன் கிரேவி என சிக்கன் வகைகள்தான்.


                                                              மலைக்  காற்று இதமாக வீச சுற்றிலும் பச்சை பசேலென இயற்கையே ஆட்சி செய்ய, அதன் நடுவே நாம் அமர்ந்து நமக்குப் பிடித்த உணவை ருசித்தால், ஆஹா... அதன் சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை.


                                                பசியில் பரோட்டாவும், சிக்கன்  லெக் பீசும், சிக்கன் சால்னா மணமும்  வெகுவாக ருசிக்க ஒரு பிடி பிடித்தோம். சிக்கன் சால்னாவில் ஊறிய பரோட்டாவை ஒரு பிரட்டு பிரட்டி, சிக்கன் 65 உடன் சேர்த்து வாயில் வைக்க, அபாரமான சுவை நம் நாவின் வழியே நுழைந்து , வயிற்றை திருப்தி செய்தது.


                                               சிக்கன் வித் பரோட்டாவுடன் திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டு, மறுபடியின் சிறுமலையின் அழகை ரசித்தவாறே மலையிறங்கி வீட்டுக்குச் சென்றோம். இந்த விடுமுறை நாள் மனதுக்கு வெகுவான இதத்தையும், உற்சாகத்தையும் நல்கியது. நீங்களும் பயணத்தோடு கூடிய உங்களுக்கு பிடித்த உணவுகளின் சுவையையும் ருசியுங்கள் உறவுகளே...

    மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....
     

    சனி, 16 செப்டம்பர், 2023

    முக்குளி

                                            வணக்கம் உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் முக்குளி சுவைப்போமா?  முக்குளி பணியாரம் என்பது மறைந்து போன நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுதான்.... இப்போது நாம் பதிவுக்குள் செல்வோமா?


                                                           நமது பாரம்பரிய பலகாரங்கள் சத்து மிகுந்ததாக எத்தனையோ உள்ளன. இப்போதைய மக்களில் சிலர்தான் இதை பற்றி அறிந்திருக்கிறார்கள். பாரம்பரிய உணவு வகைகளை பற்றி நமது பதிவின் மூலம் சொல்லும் முயற்சியே இந்த முக்குளி பணியாரம்.


                                                      முந்திரிக்  கொத்து, தேன் குழல், நீராளம், புட்டு என வகை வகையான நமது பாரம்பரிய பலகார வகைகளை நம்மில் பலர் சுவைத்திருக்க மாட்டோம். இப்பொது முக்குளி எப்படி செய்வது என்பதையும், அதன் சுவையையும் ருசிப்போமா?


    முக்குளி செய்யத்  தேவையானவை 

    பச்சரிசி -200 கிராம் 
    கம்பு - 400 கிராம் 
    தேங்காய் - 1/2 மூடி 
    சுக்கு - 15 கிராம் 
    ஏலக்காய் - 20கிராம் 
    வெல்லம் - 1/2 கிலோ 
    வெண்ணை - 20 கிராம் 



                                                   பச்சரிசி, கம்பை 2 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை  நன்றாக கழுவி காய வைக்க வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் உரலில் இட்டு இடித்துக் கொள்ளவும். பின் அதனுடன் துருவிய தேங்காய், சுக்கு இடித்து போட்டு, ஏலக்காய் பொடி, வெண்ணை சேர்த்து மாவு உதிரி, உதிரியாக வருமாறு பிசைந்து கொள்ளவும்.


                                                           ஒரு சட்டியில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி, நாம் தயார் செய்த பச்சரிசி, கம்பு என அனைத்தும் சேர்ந்த உதிரிக்  கலவையில் மாவு பதமாக வருமாறு கலக்கவும். அதனுடன் முந்திரி பருப்பும் சேர்க்கவும். பின் அந்த மாவை ஒரு நாள் நன்றாக புளிக்க விடவும். மறு நாள் எடுத்து பணியாரச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால் சுவையான முக்குளி பணியாரம் தயார். இதையே வேறொரு வகையாகவும் செய்யலாம்.


    முக்குளி மற்றொரு வகை செய்யத்  தேவையானவை :

    சத்து மாவு - 1/2 கிலோ 
    துருவிய தேங்காய் - 1/2 மூடி 
    ஏலக்காய் - சிறிது 
    நெய் - சிறிது 
    வெண்ணெய் - சிறிது 
    வெல்லம் இடித்தது - உங்கள் இனிப்பு சுவைக்கேற்ப தேவையான அளவு 
    முந்திரி - 10


                                                    சத்து மாவுடன், துருவிய தேங்காய், நெய், வெண்ணெய், ஏலக்காய் தூள், வெல்லம், முந்திரி பருப்பு பொடித்து அனைத்தையும் மாவு பதத்திற்கு கரைத்து பின் பணியாரச் சட்டியில் வார்த்து எடுக்க முக்குளி பணியாரம் தயார்.


                                              முக்குளி பணியாரம் நாம் பாரம்பரிய முறைப்படி தயார் செய்து உண்ணும் போது சுவையும், மணமுமாக அருமையாக இருக்கிறது. காலை, மாலை பலகார வேளைகளில் இதை தயார் செய்து சாப்பிட சத்துடன், சாப்பிட ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் இதை செய்து கொடுப்பதுடன், பாரம்பரிய உணவு வகைகள் சிலவற்றையாவது சொல்லிக் கொடுத்தால், அவை அடுத்த தலைமுறைக்கும் போய்ச்  சேரும்.



                                                              முக்குளி பணியாரம் காலை வேளையில் செய்து சாப்பிட, வெகு ருசியாக இருந்தது. சாப்பாடாகவும், தின்பண்டமாகவும் உள்ள முக்குளி பணியாரம் நல்லதொரு உணவு அனுபவம். நீங்களும் செய்து ருசித்து பாருங்களேன்.

    மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....